googleplay[post_list name=”video”]

 

firstpageDownload Invitation

பைந்தமிழ் நாட்டின்கண் உள்ள பஞ்ச பூதஸ்தலங்களில் நடுநாயகமாக நின்று அக்னி சொரூபமாக காட்சியளித்து நினைத்தாலே முக்தியளிக்கும் உண்ணாமலை உடனாகிய திருவண்ணாமலையின் ஈசான்ய திக்கில் 20 கி .மீ. வடகிழக்கே மங்கலத்துக்கு அருகில் (3 கி.மீ.) ஏழை விவசாயிகள் பலர் வசிக்கும் ஒரு சிறு கிராமம் கருமாரப்பட்டி. இங்கு திருவாளர் சின்னதம்பி திருமதி குள்ளம்மையார் என்னும் எளிய விவசாய குடும்ப தம்பதிகளுக்கு 3-வத குழந்தையாகப் பிறந்தவர் வெள்ளையான் என்கின்ற இன்றைய வெள்ளையானந்த சுவாமிகள் ஆவார். இவர் 17.8.1927 அன்று பிறந்தார்.

  பெற்றோர்களின் தவப்பயனாய் அவதரித்த தவக்கொழுந்து கருமாரப்பட்டிசாமி என பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் 15 ஆண்டுகளாக உணவு உண்ணாமலும் தண்ணீர் பருகாமலும் ஒரே இடத்தில் அமர்ந்து 47 ஆண்டுகளாக கடும் கவம் செய்து சித்திகள் பெற்று தன்னை நாடி வருகின்ஙவர்கள் குறைகளை அறிந்து அருள் நோக்கும்இ அருள் வாக்கும் புரிந்து விபூதியளித்து அருள் செய்து வருகிறார்.

  இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளத்தில் கிருஷ்ண பகவானும் சிவபெருமானும் நிரம்பி அருள் பொழிந்து கொண்டு இருந்தனர். இதன் விளைவாக 7,8 வயது சிறுபையனாக இருக்கும்போதே, தம் ஊரில் உள்ள கிருஷ்ணன் பஜனை கோயிலுக்கு காலைதோறும் பூஜை செய்துவிட்டு அங்கிருந்து தென்மேற்கில் தெரியும் அருள்மிகு அருiணாசலத்தை நோக்கி மனமுருக கும்பிடுவது தான் தமது அன்றாடக் கடமையாக செய்து வந்தார்.

  சக வயது குழந்தைகளுடன் கடுகுடு, கில்லிதாண்டி, தொட்டைதட்டி முதலிய கிராம விளையாட்டுகளை மிக அற்புதமாக விளையாடி நல்ல இளைஞர்கள் கூட்டம் சேர்த்து மாலையில் நடுத்தெரு விநாயகர் கோயிலுக்கு கூட்டி வந்து திருப்புகழ் பஜனைப்பாடல்கள் பாடுவதும், தமக்கு தெரிந்த இறைவன் திருவிளையாடல் சம்பந்தமான அற்புதக் கதைகளைச் சுவைபடச் சொல்லுவதுமாக வளர்ந்து வந்தார்.

 குப்பகவுண்டன் என்பவர் இவருக்கு 15 வயது மூத்தவர். பூண்டி மகானிடம் பெரும் ஈடுபாடு உடையவர். வெள்ளையனை இந்த மகானிடம் கூட்டிப் போக எவ்வளவோ முயற்சிகள் செய்தார். தம் உள்ளம் முழுவதும் சிவா – விஷ்ணு நினைவாக இருந்த வெள்ளையனுக்கு திருவண்ணாமலை – திருப்பதி வெங்கடாசலாதியைத் தவிர்த்து வேறு எந்த சாமிகள் மீதும் நாட்டம் ஏற்படவில்லை. திருவண்ணாமலையைச் சுற்றி வருவார். திருப்பதிக்குச் சென்று வருவார். உள்ளூர் கிருஷ்ணன் கோவிலில் பூஜை செய்த கையோடு அருணாசல தரிசனம் – மாலையில் பஜனை. இது தவிர வேறு யாரைப் பார்க்கவும் சிந்திக்கவும் விரப்பமேற்படவில்லை.

  வயது ஏறிக்கொண்டு வந்தது. முப்பது வயது ஆகியும் இறை நாட்ட மிகுந்த இல்லற நாட்டம் சிறிதும் இல்லாம் தம் விவசாய வேலைகள் உண்டு தம் பூஜை, பஜனை உண்டு என்று வாழ்ந்துவந்தார். திண்ணைப் பள்ளியில் 2, 3 ஆண்டுகள் பயின்றது தான் இவர் கல்வி.

  வெள்ளையனின் தாய் மாமாவிற்கு 15 வயதில் அமிர்தம்மாள் என்று ஒரு பெண் இருந்தார். உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்று 30 வயதான இவருக்கு மணம் முடித்து வைத்தனர் (1956). இரு ஆண்டுகள் கழித்து ரகுநந்தன் ( ரகுநாதன் ) ( 1956 ) பிறந்தார். ஒருநாள் காலையில் வயல் வெளியில் ஒரு மகான் வெள்ளையனுக்கு காட்சி கொடுத்தார். 'நீதான் அந்த குப்பனுடைய குரு பூண்டி மகானா' என்று சாமி கேட்டாh. 'ஆமாம், நீ என்னிடம் இன்றே வா' என்று சொல்லிவிட்டு பூண்டி மகான் மறைந்து விட்டார்.

  ஒரு நொடி கூட தாமதியாமல் வீட்டுக்கு வந்து தம் மனைவி அமிர்தம்மதவையும் கூட்டிக் கொண்டு திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையார் உத்தரலு பெற்றுக் கொண்டு பூண்டி மகானை சந்திக்கச் சென்றார். பெரும் கூட்டம். அந்தக் கூட்டத்திலும் பூண்டி மகான் வெள்ளையனை கூப்பிட்டு வெற்றிலை, பழம், தேங்காய், பூ, வெல்லம் ஆகியவற்றை அமிர்தம்மாள் மடியில் வைத்து இருவருக்கும் திருநீறு பூசி நீ என்னை விட ஒருபடி மேலாக வந்து நல்ல தீர்க்காறுசுடன் இருப்பாயடா! என்று கூறி அனுப்பினார்.

 மனதிலுள்ள இறைதாகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. உள்ளம் முழுவதும் நிரம்பி வழிந்தது. பூண்டி மகானின் ஆசீர்வாதங்கள் எண்ணெய் நிரம்பிய விளக்கில் திரிபோட்டு தீபம் ஏற்றியது போல ஆகிவிட்டது. தனிமையில் இருந்து தியானம் செய்ய வேண்டுமென்று மனது பெரிதும் விரும்பியது. 1962-ல் தம் வீடு ஒரு சிறு குடிசை. அதனால் நடுத்தெரு பிள்ளையார் கோவிலில் கொஞ்சநாள் உட்கார்ந்து தியானம் செய்து பார்த்தார். சூழ்நிலை சரியாக இல்லை.

  அருகில் 3 கி. மீ. தூரத்திலுள்ள மங்களத்தில் டீக்கடை அப்பு கவுணடர் நல்ல பக்தர். இவரிடம் அதிக அன்பு உடையவர். தம் கடைக்கு பின்னால் ஒரு அறை இருந்ததால் அங்கு சென்று தியானம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். தினசரி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தியானத்தில் உட்கார்ந்து விடுவார். திரும்பும்போது ஒரு டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார். இவ்வாறு அப்பு கவுண்டர் இடத்தில் சிலவருடங்கள் கழிந்தன. பிறகு அங்கும் சூழ்நிலை சரிபட்டு வரவில்லை.

  இரண்டாவது மகன் தவராஜி (1969) பிறந்தார். அணையாத தமது ஆன்ம தாகத்துடன் தம் மனைவி அமிர்தம்மாவை அழைத்தார். நான் நிலையாக ஒரே இடத்தில் சம்மணம் இட்டு அமர்ந்தபடி தியானத்தில் இருக்க விரும்புகின்றேன். அநேகமாக என் ஆயுள் பரியந்தம் கூட இவ்வாறு இருந்துவிடலாம் என்று கருதுகின்றேன். என் உள்ளத்திலிருக்கும் சிவா விஷ்ணு தெய்வங்கள் உன்னைக் காப்பாற்றும் நீ பயப்படாதே என்று சொன்னார்.

  ஒரு சிறிய சிமெண்டு மேடை போட்டு அதில் சாமியை உட்கார வைத்த விட்டார் அம்மையார். பெரிய பையன் நந்து (10 வயது) 5-வது படிப்பவன். படிப்பை நிறுத்தி தம் விவசாயத்திற்கு துணையாக சுவாமிகளை பராமரித்து வந்தார். 1970 முதல் ஆரம்பித்த இந்த தீவர தியானம் 25 ஆண்டுகள் தொடர்ந்தது.

  கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரத்தை குறைத்துக் கொண்டு 1972 வாக்கில் சுத்தமாக தண்ணீர் பருகுவதைக் கூட நிறுத்திவிட்டார். எப்போதும் நிர்விகல்ப சமாதியிலிருந்தபடியே, சித்தர்கள் பலருடன் உரையாடுவது எல்லாம் மற்றவர்களுக்கு ஒரு பித்தன் உளறுவது போலத் தென்படும்.

  1979 – இல்ஒரு வெள்ளிக்கிழமை பூண்டி மகான் சுவாமிகள் சமாதியடைந்மார். நம் வெள்ளையானந்த சுவாமிகள் மனைவி அமிர்தம்மாளை அழைத்து மறுநாள் சனிக்கிழமை முதல் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாகவும் ஆகவே கம்பு சோற்று நீராகாரத்தில் உப்பு போட்டு கொண்டு வரும்படியும் கூறினார்.

 அது முதல் ஏதோ சிறுது ஆகாரம் சாப்பிட ஆரம்பித்தார். இருந்தாலும் தாம் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் பெருகிவரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விபூதி பொடுத்து ஆசீர்வதிப்பதுமாக இருந்தார். ஏழைகள், பணக்காரர்கள், சிறியவர்கள்இ பெரியவர்கள், அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் என்று பலரும் இவரது அருளாசிகளைப் பெற்று தமது கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆறுதல்களை பெற நாடிவந்தார்கள். சித்தத்தை சிவன்பால் வைத்து நிர் விகல்ப சமாதியில் இருந்து வந்த சித்தரை உபாதைகள் எதுவும் பாதிக்கவில்லை.

  இவர் தலையில் ஜடா முடி இரு பிரிவுகளாக 12அடி நீளம், தாடி 5 அடி நீளம் உள்ளது. மூன்றையும் மும்மூர்த்தகளாக வடம் போல இணைத்தக் கட்டி சுருட்டி ஒரு மர ஸ்டூல் மீது வைத்திருந்தார். பக்தர்கள் இதைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்று திருநீறு வாங்கிச் சென்றனர். கொண்டு வரும் எலுமிச்ச பழங்களை அவரவர்களுக்கே கொடுத்து சாறு பிழிந்து சாப்பிட்டு வரவும், வீட்டு முகப்பில் கட்டி விடச்சொல்லி அவரவர் கர்மவினைகளை போக்கவும் உதவுகின்றார். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி, புஷ்பங்களை வெளியில் தாம் பிரதிஷ்டை செய்துள்ள வேலுக்கு வைத்து கும்பிட்டு விட்டு வரச் சொல்லி ஒவ்வொரு பக்தரிடமும் சலிக்காமல் குறைகளை கேட்டு தம் அருட்பார்வையை அவர்கள் மீது படரவிட்டு அருள்பாலிக்கின்றார்.

  ஒரு ஏழை விவசாயி ஒருவன் தன்னிடம் நிலம் இருந்தும் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தான். சுவாமியைப் பார்க்க வேண்டுமென்று நீண்டநாள் ஆவல் அவனுக்கிருந்தது. ஒருநாள் சுவாமியிடம் சென்று சுவாமி நான் வறுமையில் இருக்கிறேன். ஒரு கிணறு வெட்டி விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று முறையிட்டான். சுவாமி அவர்கள் 'டேய், உன் நிலத்திலேயே உள்ள கிணற்றைதூர் வாரி  சரிப்படுத்து. அதிலேயே நிறைய தண்ணீர் வரும்' என்று அருள் பாலித்தார். தற்போது அந்த விவசாயி நன்றாக விவசாயம் செய்து வறுமையிலிருந்து மீண்டு மகிழ்வுடன் குடும்பம் நடத்துகிறார்.

  மற்றொரு சமயம் ஒரு பக்தர் தன்னி;முள்ள பசுவின் பாலில் சுவாமிக்கு பாயாசம் செய்து எடுத்துக் வந்தார். சுவாமியின் மனைவியார் சுவாமியிடம் ' ஐயா, சாப்பிட வாருங்கள்' என்று அழைத்தார். அதற்கு சுவாமிகள் 'எனக்காக ஒரு பக்தன் பாயாசம் செய்து வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்தவுடன் அவன் பாயாசத்தை நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று அவன் வருவதற்கு முன்னே குறிப்பிட்டுச் சொன்னார். பிறகு இச்செயல் நடந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரிய மடைந்தனர். இதுபோல் பல அதிசய நிகழ்வுகளை சுவாமிகள் தினந்தோறும் நடத்திக் கொண்டு வருகிறார்.

 சுவாமிகள் ஐப்பசி மாதம் பூசநட்சத்திரத்தில் (5/11/2012) ஜீவசமாதி அடைந்து லிங்க வடிவமாக அருள்பாலிக்கின்றார்.

  திருவண்ணாமலை – அவலூர்பேட்டை இடையில் உள்ள மங்கலம் கிரமத்தில் இறங்கி ஆட்டோவில் கருமாரப்பட்டியில் உள்ள சுவாமிகளின் சமாதியை அடையலாம்.

 அண்மை காலத்து சேஷாத்ரி சுவாமிகள், பூண்டி மகான், திருவலம் மௌனகுரு சுவாமிகள், பழநி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், புஞ்சைப் புளியம்பட்டி வேணுகோபால சுவாமிகள் ஆகியோர் வரிசையில் வைத்து போற்றத் தக்க இவர் நடமாடும் தெய்வமாக இருக்கும் போதே தரிசனம் பெற்று ஆன்மா உயர்வு பெறலாம்.